Thursday, May 2, 2019

சங்ககாலச் செடிகொடிகள் -- துணைநூல்கள் இரண்டு

இரண்டு நூல்கள் - அபூர்வமானவை. சில சமயம் துணை நூல்கள், முக்கியத்துவத்தாலும், அவை தரும் உதவியாலும் பல முதல் நூல்களை விடவும் நம் கவனத்திற்கு மிகவும் உரியதாக ஆகிவிடும். அத்தகைய நூல்கள் இரண்டு. இன்னும் பல இருக்கலாம். ஆனால் என் கவனத்தில் வந்தவற்றில் இவை இரண்டு நூல்களைக் குறிப்பிடாமல் இருக்க முடியவில்லை

ஒன்று -- Guide to the Economic Plants of South India by Dr D Daniel Sundararaj and Girija Balasubramanyam November 1959 Amudha Nilayam Private Limited. ஆங்கிலத்தில் அமைந்த இந்த நூல் இரு பகுதிகளாகப் பொருள் பிரிவு படுத்தப்பட்டிருக்கிறது. முதல் பகுதி கிட்டத்தட்ட 1140 தாவ்ர செடிகொடிகளின் அட்டவணை. ஒன்பது தூண் நிரல்களில் ஒவ்வொரு செடி கொடியின் பெயருக்கு உரிய பல மொழிப் பெயர்களும், குறிப்புகளும் தரப்படுகின்றனஉதாரணமாக வாகை என்ற மரத்தின் சம்பந்தமான பெயர்கள் முதலியவற்றை அறிய வேண்டும் என்றால் நூல் விவரங்களை இவ்வண்ணம் பட்டியல் இடுகிறது

Botanical Name - Albizzia lebeck 

Family - Leguminosae (Mimosaceae) 

English or Popular Names -- Lebbeck; Siris 

Tamil - Vaagai; Malayalam - Vaaka; Telugu - Dirisina; Duchiram; Kanarese - Bagae; Bengha; Hindi or Hindusthani - Siris 

Notes - Wood used for agricultural implements, posts, spokes for cart wheel and in cabinet making. Leaves readily eaten by cattle. A good avenue tree and wind break plant for plains. A bee pasturage plant. 

இவ்வண்ணம் 1145 பெயர்களுக்கும் 9 தூண் நிரல்களில் பெயர்களையும், குறிப்புகளையும் நூல் தருகிறது முதல் பகுதியில்இரண்டாம் பகுதியில் -- 

Classified list of Economic Plants என்னும் தலைப்பிட்டு 

i) Food Crops 

ii) Oil yielding plants 

iii) Sugars and starches 

iv) Fibres 

v) Medicinal plants, narcotics and masticatories 

vi) Spices, condiments and seasoning herbs 

vii) Plants yielding rubber, tans, dyes, gums, resins and oleoresins 

viii) Fodders 

ix) Green Manure, green-leaf manure plants 

x) Avenues, fuel trees, hedge plants, shade trees and wind break plants 

xi) Timber 

xii) miscellaneous economic plants 

இதைத்தவிர க்ளாஸரி, குறிப்பு நூல்கள் என்று தருகின்றது நூல். இவற்றையும் தவிர தமிழ், மலையாளம், தெலுகு, கன்னடம், ஹிந்தி என்று ஐந்து அட்டவணைகளில் மரம் செடி கொடிகளின் அறியப்பட்ட பெயர்களில் நிரலிடுகிறதுஅமுத நிலையம் அன்று போட்டிருக்கிறது. இன்றும் விற்பனையில் இருக்கிறதா தெரியவில்லை. எனது அருமை நண்பர் திரு மஹி அவர்கள் இருந்தால் அவரைக் கேட்டு ஏதாவது செய்யலாம். ஆனால் அவர் இன்று இல்லைபல துறையைச் சார்ந்தவர்களுக்கும் இந்த நூல் ஓர் அருமையான பொக்கிஷம் என்பதைச் சொல்லவும் வேண்டுமோ

அடுத்த நூல் திரு பி எல் சாமி அவர்கள் எழுதிய 'சங்க இலக்கியத்தில் செடிகொடி விளக்கம்' என்னும் நூலாகும்திருநெல்வேலித் தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் லிமிடெட் வெளியிட்ட இந்த நூல் வந்த் ஆண்டு -- 1967. கிட்டத்தட்ட 210 பக்கங்கள் கொண்ட சிறு நூல் ஆனால் பெரும் பயன் உடைய நூல் இது எனலாம்சங்க இலக்கியத்தில் செடி நூற் செய்திகள், குறிஞ்சி, மருதம், முல்லை, நெய்தல், பாலை, காந்தள், பாம்புச் செடி, நரந்தம், முருக்கும் கவிரும், கொன்றை, பாதிரி, புன்னை, முசுண்டையும் அடும்பும், இலவும் கோங்கும், இலுப்பை, தாழை, குருகு, குரவு, குருந்து, நெல்லி, கருவிளம், கூவிளம் ஆகிய தலைப்புகளில் நூலை அமைத்திருக்கிறார். அத்தனைத் தலைப்புகளிலும் ஆசிரியர் சங்க இலக்கியத்தில் காணும் மலர்கள் பற்றிய உவமைச் செய்திகளை, மலர்களின் செடிநூல் உண்மைகளுடனும் பொருத்திக் காட்டுவது ஒருங்கே பல செய்திகளை நமக்கு உரைக்கின்றது. பழந்தமிழரின் இயற்கையைப் பற்றிய உணர்வு, கவிஞர்களின் இயற்கையைச் சார்ந்த அனுபவம், இயற்கை தாவர இயல் உண்மைகளைப் புலவர்கள் நயமாக உணர்ச்சி சார்ந்த அனுபவங்களைச் சொல்லப் பயன்படுத்திய விதம் என்று பல செய்திகள் புலனாம் வண்ணம் ஆசிரியர் எழுதுகிறார்இந்த நூலில் மேலும் ஒரு சிறப்பு, பூக்களுக்கும் செடிகளுக்கும் வண்ணப் படங்கள் இட்டுக் காட்டியிருப்பது. இன்றும் இயற்கையில் நாம் நேரடியாகக் காணும் போது அடையாளம் தெரியும் வகையில் அமைந்திருக்கிறது

*** 

No comments:

Post a Comment