Thursday, May 2, 2019

நரசிம்மம் பற்றி இரு வெண்பா

அரியெங்கே ஆர்ந்த இடமிங்கே உண்டோ 
தெரிவானோ என்றுதைத்த தந்தை -  கரியாகி 
வந்தானைக் காட்டென்ற சொல்லிலும் ஆங்குடனே 
நின்றானை நின்மலனைப் போற்று. 

போற்றித் தொழுதேத்தும் புண்ணியனை நாவினால் 
ஆற்றி மகிழும் நரசிங்கன் - தேற்றமாய் 
நாடும் உளத்தார்க்கே நன்றெளியன் காண்மினோ 
ஊடுகலந் தூறும் உளம். 

***




No comments:

Post a Comment