Thursday, May 2, 2019

ஸ்ரீராமகிருஷ்ணர் மீது தமிழ்ப் பாடல்

 அனுஷ்டுப் என்னும் சந்தம் இரண்டு வரிகள் கொண்டது. ஒவ்வொரு வரியிலும் இரண்டு பாதங்கள். ஒவ்வொரு பாதத்திலும் எட்டு உயிரெழுத்துகள் இருக்க வேண்டும். இந்த ஓர் அம்சத்தை வைத்துத் தமிழில் ஸ்ரீராமகிருஷ்ணர் மீது ஒரு செய்யுள் செய்து பார்த்தேன்.

*

ஸ்ரீராமக்ருஷ்ணரை நினை
என்றென்றும் மாறாத நன்மை |
யாமங்களில் அவர் நாமம்
இருள் கடியும் நல்தீபம் ||

உலகாசைகள் மறையும்
உள்ளத் தூய்மையே விளையும் |
பகவத் பக்தி கனியும்
பரமஞானம் பொலியும் ||

பிரிவினைகள் அகலும்
பரிவுணர்வே திகழும் |
விரிந்த மனம் விளங்கும்
விவேகமதில் துலங்கும் ||

குறுகிய நோக்கம் மாறும்
குவலய நோக்கம் சேரும் |
வறுமை வறுமையாகும்
வாழ்வதே பெருமை ஆகும் ||

ராமக்ருஷ்ணரை நினைத்தால்
உள்ளப் பகைகள் ஒழியும் |
சேமம் அவர் திரு நாமம்
சிறப்புகள் எல்லாம் சேர்க்கும் ||

ஸ்ரீராமக்ருஷ்ணரை நினை
என்றென்றும் மாறாத நன்மை |
யாமங்களில் அவர் நாமம்
இருள் கடியும் நல்தீபம் ||

***

No comments:

Post a Comment