Monday, December 23, 2019

காப்பாக மாதவன்

காப்பாக நின்றாலும் ககனமெலாம் நிறைந்தாலும்
கருத்துக்கு அரியனாம் கார்வண்ணன்
கனிந்தருள் செய்பவன் கருத்தினில் இனிப்பவன்
காலத்தின் நாயகன் கலந்துளத்தின்

ஓர்ப்பாகிக் கற்பவன் உலகாகி நிற்பவன்
குணமேறி நிற்பதும் கண்டுவந்தே
கட்டிவிட வந்தவள் கருத்தழிய நின்றதும்
காணாத பேர்களும் கேட்டுவப்பத்

தீப்பாய்ந்த கானிலும் தப்பித்த அரவமும்
தப்பாமல் எய்துமச் சரமாகியே
தஞ்சமென அடைந்ததும் தவறாமல் எய்யவே
தரைதட்டி அழுத்தியக் கால்விரலையே

மீப்பதிய எழுத்திட்ட மாறாத விதியினில்
மாற்றிடவே அழுத்திட மனங்கனிவையோ
மகத்திற்கு மப்பாலும் மற்றணுவின் உட்பாலும்
முழுதாகி மகிழ்ந்துலவு மாதவனே.

*** 

No comments:

Post a Comment